close
Choose your channels

சமந்தா குடும்பத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு: அதிர்ச்சி தகவல் 

Thursday, September 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகரும் நடிகை சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜூனாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மனித உடல் ஒன்று அழுகிய நிலையில் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹாபப்நகர் என்ற என்ற பகுதியில் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது. சுமார் நாற்பது ஏக்கர் பரப்பளவுள்ள இந்த பண்ணை வீடு கடந்த சில வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த பண்ணை வீட்டை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அங்கு துர்நாற்றம் வருவதை கண்டனர். இதனையடுத்து அந்த பகுதியைச் சோதனை செய்து பார்த்தபோது அழுகிய நிலையில் ஒரு பிணம் எலும்புக்கூடாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தரப்பட்டது.

மோப்ப நாயுடன் வந்த காவலர்கள் மனித எலும்புக்கூட்டையும், மற்ற எலும்புகளையும் சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர். கண்டெடுக்கப்பட்ட பிணம் அழுகிய நிலையில் சிதிலமடைந்து எலும்புக்கூடாக இருப்பதால் இந்த பிணம் குறித்த தகவல்களை கண்டுபிடிப்பது சிரமமான விஷயம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொலையா? தற்கொலையா? ஆறு மாதங்களுக்கு முன் இந்த பண்ணை வீட்டில் என்ன நடந்தது? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.