பிரியவே கூடாது… கைகளுக்கு சிறை விலங்கிட்டு காதலித்த ஜோடி… 123 நாட்களில் நடந்த சோகம்!

  • IndiaGlitz, [Monday,June 21 2021]

காதல் எனும் உணர்வுக்கு உலகம் முழுவதும் பெரிய மதிப்பு கொடுக்கப் படுகிறது. இப்படியான சரித்திரத்தில் நாமும் இடம்பிடித்து விட வேண்டும் என நினைத்த ஒரு காதல் ஜோடி பிரியவே கூடாது என முடிவெடுத்து இருக்கின்றனர். இதனால் வேறு யாரும் நம்மை பிரித்துவிடக் கூடாது என்றும் ஏன், நம்மால் கூட நம்மைப் பிரிக்க முடியாமல் இருக்க வேண்டும் என தீர்மானித்து இருக்கின்றனர்.

எனவே அந்தக் காதல் ஜோடி, காவலர்கள் பயன்படுத்தும் சிறை விலங்கை கைகளில் போட்டுக் கொண்டு இருவரும் ஒன்றாக சேர்ந்து, இணைபிரியாமல் வாழ்க்கை நடத்தத் துவங்கி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். உக்ரேனைச் சேர்ந்த கார் விற்பனையாளர் அலெக்ஸாண்டர் குட்லே. ஒப்பனைக் கலைஞர் விக்டோரியா புஸ்டோவிடாவா. இருவரும் தீராதக் காதல் வலையில் விழுந்துள்ளனர்.

இதையடுத்து பிரியாமல் வாழவேண்டும் என முடிவெடுத்த இந்த ஜோடி, அலெக்ஸாண்டர் தனது வலது கையிலும் விக்டோரியா தனது இடது கையிலும் என இருவரும் ஒன்றாகச் சேர்ந்தது சிறை காப்பை போட்டுக் கொண்டு வாழத் துவங்கியுள்ளனர். இதனால் ஒரு ஷு லேஸை கட்டுவதாக இருந்தாலும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்துதான் அதைச் செய்தாக வேண்டும். இப்படி இருவரும் ஒன்றாக வெளியே போவது, அன்றாட வேலைகளைச் செய்து கொள்வது என வாழ்க்கை நகர்ந்து இருக்கிறது.

ஆனால் அலெக்சாண்டர்- விக்டோரியா வாழ்க்கை வெறும் 123 நாட்களில் கசந்து போய் இருக்கிறது. இதனால் கை விலங்கை உடைத்து விட்டு இருவரும் பிரிந்து விட்டதாக தற்போது அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த விக்டோரியா 24 மணி நேரமும் ஒன்றாக இருப்பதால் அவருக்கு என்மீது ஈர்ப்பே இல்லாமல் போய்விட்டது. மிஸ் யூ என்ற வார்த்தையை அவர் சொல்லவே இல்லை எனத் தெரிவித்து இருக்கிறார்.

இதேபோல அலெக்சாண்டர் இருவரின் விருப்பு வெறுப்புகளும் ஒரே மாதிரியாக இல்லை. ஒரே அலைவரிசையில் இல்லாததால் இருவரும் பிரிகிறோம் எனத் தெரிவித்து இருக்கிறார். இந்தச் சம்பவம் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மேலும் இந்தக் காதல் ஏன் கசந்துவிட்டது என்பது குறித்து தற்போது நெட்டிசன்கள் விவாதிக்க துவங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இவர்கள் ஒரு பிரபல நடிகையின் பெற்றோர்கள்: கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

நேற்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதை அடுத்து தந்தையர் குறித்து தங்களது மலரும் நினைவுகளை தமிழ் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்

கிராமத்துக் கெட்டப்பில் தரிசனம் தந்த “குக் வித் கோமாளி” பிரபலம்… குவியும் லைக்ஸ்!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான “குக் வித் கோமாளி” எனும் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

உலக யோகா தினத்தில் ரம்யா பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட் புகைப்படங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் உலக யோகா தினம் கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பாரத பிரதமர் நரேந்திர மோடி யோகாவின் பெருமை குறித்து நாட்டு

மல்லாக்க கிடந்த காரை உற்சாகத்தோடு மீட்ட பொதுமக்கள்… இணையத்தை கலக்கிய வீடியோ!

மும்பை சாலையில் குப்புற கவிழ்ந்த கார் ஒன்றை 10க்கும் மேற்பட்ட கடைவாசிகள் சேர்ந்து திருப்பிய வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில்

மகனுக்கு 3 கோடி ரூபாயில் சொகுசு காரா? நிஜ ஹீரோ சோனு சூட் அளித்த விளக்கம்!

கொரோனா நேரத்தில் நடிகர் சோனு சூட் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளைத் தேடிப்போய் செய்து வந்தார்.