close
Choose your channels

கட்சியை விட்டு நீக்கிய கார் டிரைவருக்காக தர்ணா செய்த தீபா

Wednesday, January 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த ஆண்டு எம்ஜிஆர் அம்மா பேரவை என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியில் அவருடைய கணவர் மாதவனுக்கு இருந்த மரியாதையைவிட அவரது கார் டிரைவரான ராஜாவுக்கு இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கருத்துவேறுபாடும் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கார் டிரைவர் ராஜாவை திடீரென கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தீபா அதிரடியாக நீக்கினார். இந்த நீக்கத்திற்கு உண்மையான காரணம் என்னவென்று அந்த கட்சியின் தொண்டர்களுக்கே புரியாத புதிராக இருந்தது

இந்த நிலையில் மாம்பலம் போலீசார் ராஜாவை திடீரென கைது செய்தனர். ஆட்டோ டிரைவர் ஒருவர் தன்னை ராஜா தாக்கியதாக அளித்த புகாரின் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக ராஜாவை கைது செய்த போலீசாரிடம் தீபா வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை விடுவிக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஒருவருக்காக அந்த கட்சியை தோற்றுவித்தவரே தர்ணா போராட்டம் செய்து வருவதை அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.