close
Choose your channels

கவுதம் மேனனின் அடுத்த படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

Monday, December 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே.

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் ’குயின்’ என்ற டைட்டிலில் இணையதள தொடரையும், இயக்குனர் ஏஎல் விஜய் ’தலைவி’ என்ற டைட்டிலில் திரைப்படமாகவும் இயக்கி வருகின்றானர். இயக்குனர் பிரியதர்ஷினியின் திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் குயின் திரைப்படத்திற்கு எதிராக தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். ‘குயின்’ என்ற இணையதள தொடரை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் இன்று தீபா தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் இயக்குனர் கௌதம் மேனன் இந்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

எங்கள் குடும்பத்தின் அனுமதியின்றி ஜெயலலிதா குறித்து படமோ, வெப் சீரிஸோ எடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தீபக் மற்றும் தீபா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது இதுகுறித்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.