நாடாளுமன்ற தேர்தல்: ஜெ.தீபா அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Friday,March 15 2019]

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தும் தனித்து போட்டியிடவும் வியூகம் அமைத்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் விருப்ப மனுக்களை பெற்று தேர்தலை சந்திக்க தயாராகியுள்ள நிலையில் தற்போது தீபா கட்சியும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கட்சியான எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'வரும் 18.04.2019 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஜெ.தீபா அணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பமுள்ள கழக உடன்பிறப்புகள், வரும் 16.03.2019 சனிக்கிழமை மற்றும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

தீபாவின் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பங்கள் பெற அக்கட்சியின் தொண்டர்கள் குவிய வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுக-திமுக ஆகிய இரு அணிகளின் வேட்பாளர்களுக்கும் இக்கட்சியின் வேட்பாளர்கள் பெரும் சவாலாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

மதுரவாயல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது சென்னை கல்லூரி மாணவியா? திடுக்கிடும் தகவல்

சென்னை மதுரவாயல் அருகே உள்ள ஏடிஎம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஏடிஎம்-இல் பணம் நிரப்பி கொண்டிருந்த ஊழியர்களை கத்தியால் தாக்கி கொள்ளையடித்தனர்.

நியூசிலாந்து துப்பாக்கி சூடு: நூலிழையில் உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்

நியூசிலாந்து நாட்டில் சற்றுமுன்னர் மர்மநபர் ஒருவர் மசூதி ஒன்றில் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும்

இந்த கேள்வியெல்லாம் உங்களுக்குத்தான் மிஸ்டர் சி.எம்! கமல்ஹாசனின் ஆவேச வீடியோ

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து மற்ற ஊடகங்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிடும் முன்னரே கமல்ஹாசன் இந்த விஷயத்தில் போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

வாரம் 2 நாள் லீவு விடுங்க: பொள்ளாச்சி விவகாரம் குறித்து நடிகர் விவேக்

செல்போன், இண்டர்நெட் என்று வந்ததோ அன்றுமுதல் பெற்றோர் உள்பட உறவுகளிடம் பேசுவதே குறைந்து விட்டது

செல்போன்கள் கையிலிருக்கும் அணுகுண்டு: உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கருத்து!

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் போன்ற கொடூரமான சம்பவங்கள் நடைபெற முக்கிய காரணங்களில்து சமூக வலைத்தளங்களும் ஒன்று.