தீபா வேட்புமனு தள்ளுபடியா?

  • IndiaGlitz, [Friday,March 24 2017]

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தீபா நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். தீபா அரசியலுக்கு அடியெத்து வைக்க முடிவு செய்த நாளில் இருந்து அருகில் இருந்த அவரது கணவர் மாதவன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யும் முக்கிய நிகழ்ச்சியில் உடனில்லை என்பது கவனிக்கத்தக்கது. எனவே தீபா போட்டியிடுவதை அவரது கணவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தீபாவின் வேட்புமனுவில் கணவர் மாதவன் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும், கணவரின் சொத்து விபரங்களும் குறிப்பிடப்படவில்லை என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கணவரின் பெயர், மற்றும் கணவரின் சொத்து மதிப்பு குறிப்பிடாததை தீபா வேண்டுமென்றே செய்திருக்க வேண்டும் என்றும் இவை இரண்டு கவனிக்காமல் விட்டுவிட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிடிவி தினகரன், மதுசூதனன், மற்றும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோர் பலம் பொருந்திய வேட்பாளராக இருக்கும் நிலையில் தன்னால் வெற்றி பெற முடியாது என்பதால் வேட்புமனுவை வேண்டுமென்றே குளறுபடியான தகவல்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று தீபா முடிவு செய்திருப்பதாகவும், அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் கொள்கின்றனர். அவர்களுடைய சந்தேகம் உண்மையா? என்பது போகப்போகத்தான் தெரியும்

More News

கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதிகாசங்களில் ஒன்றாகிய மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக வள்ளியூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆதிநாத சுந்தரம் என்பவர் சமீபத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

கூடாரத்தை ஒரேயொரு அறிவிப்பில் காலி செய்த கருணாஸ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது.

'கடுகு' இயக்குனருக்கு பிரபல இயக்குனர் எழுதிய உணர்வுபூர்வமான கடிதம்

'கோலி சோடா', 10 எண்றதுக்குள்ள' ஆகிய படங்களின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கிய அடுத்த படமான 'கடுகு' இன்று வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளது

அருள்நிதியின் புதிய படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அருள்நிதி நடித்த 'ஆறாது சினம்' கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் 'இரவுக்கு ஆயிரம் கணகள் என்ற படத்தில் நடித்து வருகிறார்....

எழுத்தாளர் அசோகமித்ரன் மறைவு. கமல் உள்பட பிரபலங்கள் இரங்கல்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் அசோகமித்ரனின் மறைவு தமிழ் எழுத்துலகம் மட்டுமின்றி திரையுலகத்தையும் அதிர்ச்சி அளித்துள்ளது. கமல்ஹாசன் உள்பட பல திரையுலகினர்களும் அசோகமித்ரனின் எழுத்துக்கு வாசககர்களாக இருந்தனர்...