ஓபிஎஸ் இல்லத்தில் தீபா. ஆரத்தி எடுத்து வரவேற்பு

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வரும் 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த தினத்தில் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்த நிலையில் சற்று முன்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து தனது ஆதரவை அளித்தார்.

மேலும் இன்று முதல் தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும், முதலமைச்சரும் தானும் அதிமுகவின் இரு கரங்களாக இணைந்து செயல்படுவோம் என்றும் பேட்டி அளித்துள்ளார்.

பின்னர் தீபா முதல்வர் ஓபிஎஸ் அவர்களுடன் அவருடைய இல்லத்திற்கு சென்றார். அங்கு ஓபிஎஸ் குடும்பத்தினர் தீபாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்றுள்ள தீபா, முதல்வருடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நயன்தாரா காதலரின் திடீர் மாற்றம் ஏன்?

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் காதலித்து வருவதாகவும், 'நானும் ரெளடிதான்' படத்தின்போது தோன்றிய இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடியவுள்ளதாகவும் கூறப்படுகிறது...

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-தீபா சந்திப்பு. திருப்பம் ஏற்படுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்த வரலாற்று முக்கியத்துவமான தினம் இன்று. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், ஜெயலலிதா மரணம் அடைதுவிட்டதால் அவரது தண்டனை நீக்கப்பட்டு, மீதி மூவருக்கும் பெங்களூர் தனிநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுத

எடப்பாடி பழனிச்சாமி உள்பட 10 அமைச்சர்களுக்கு ஆளுனர் அழைப்பு

அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை

கூவத்தூர் சென்ற பாண்டியராஜன் தடுத்து நிறுத்தம்.

சசிகலா ஆதரவு தரப்பி எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடைய விருப்பத்தின் பேரிலே இருப்பதாகவும் இருவிதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

கூவத்தூரில் 144 தடை உத்தரவு. போலீசார் அதிரடி

கூவத்தூரில் சசிகலா ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதும், அவர்களுடன் சசிகலா ஆலோசனை செய்து கொண்டிருப்பதும் தெரிந்ததே