ஒரே மாதத்தில் உடைந்தது தீபா கட்சி. தனிக்கட்சி ஆரம்பிக்கின்றார் கணவர்

  • IndiaGlitz, [Saturday,March 18 2017]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சமீபத்தில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இந்த பேரவையின் சார்பில் அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தீபாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்திய மாதவன், தீபாவின் பேரவையில் தீய சக்திகள் இருப்பதாகவும், அதனால் அந்த பேரவையில் இருந்து தான் விலகியதாகாவும் கூறினார்

மேலும் தீபா ஆரம்பித்தது கட்சி இல்லை என்றும், அது ஒரு பேரவைதான் என்றும், தான் விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், இக்கட்சியின் சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து தொண்டர்களிடம்(!) கலந்து ஆலோசித்து முடிவு செய்ய உள்ளதாகவும் கூறினார்

தீபாவின் கட்சியை உடைக்க டிடிவி தினகரனிடம் மாதவன் பணம் பெற்றுள்ளதாக தீபாவின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டி. அதிகாரபூர்வ அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் வரும் ஏப்ரம் 12-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் தேசிய கட்சியான பாரதிய ஜனதாவும் தற்போது வேட்பாளரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு தேதி அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக ஒன்றுபட்டு இருந்தது. ஆனால் அவருடைய மறைவிற்கு பின்னர் ஒருசில மாதங்களில் அதிமுக, சசிகலா அணி மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது...

சிறையில் தள்ளிவிடுவேன். ஜெ. மகன் என்று கூறி வழக்கு போட்ட நபருக்கு நீதிபதி எச்சரிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரது ஆன்மாவை கூட நிம்மதியாக இருக்கவிடாமல் திடீர் திடீரென ஆளாளுக்கு தோன்றி நான் ஜெயலலிதாவின் மகன், நான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வருகின்றனர். மறைந்த முதல்வருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்படும் போலியான நபர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக &

'பாகுபலி 2' ரிலீசுக்கு முன்னர் ராஜமெளலியின் புத்திசாலித்தனமான திட்டம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியுள்ள 'பாகுபலி 2' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ஒரே நாளில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப்பெரிய சாதனை ஏற்படுத்தியுள்ளது...

'காற்று வெளியிடை' இசை வெளியீடு. அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' திரைப்படத்திற்கு 'யூ' சர்டிபிகேட்டை சென்சார் அதிகாரிகள் அளித்துள்ளனர் என்பதையும் இந்த படம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்ற தகவலையும் சற்று முன்னர் பார்த்தோம்