இதுதான் வாழ்க்கை? பிரபல பாலிவுட் நடிகை கூறிய கருத்தால் வைரலான பதிவு!

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக மாறி பின்னர் ஹாலிவுட்டிலும் முத்திரைப் பதித்தவர் நடிகை தீபிகா படுகோன். பெங்களூருவில் பிறந்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு “ஐஸ்வர்யா” எனும் கன்னடப் படத்தில் அறிமுகமானார். இதையடுத்து ஒருசில படங்களில் நடித்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான “ஓம் ஷாந்தி ஓம்” திரைப்படத்தில் தனது திறமையான நடிப்பை வெளியப்படுத்தியதன் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படுகிற ஒரு நடிகையாக மாறினார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “கோச்சடையான்” படத்தில் நடித்த இவர் சமீபத்தில் தளபதி விஜய் நடித்த “வாத்தி கம்மிங் பாடலுக்கு” தனது கெத்தான நடையைப் பதிவிட்டு தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தீபிகாவிற்கு 55 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தனது வாழ்க்கை குறித்து அவர் கூறிய ஒரு பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் அதிக கவனம் பெற்று இருக்கிறது. “நம்பகத்தன்மை, நோக்கம் மற்றும் ஏக்கம் ஆகியவற்றால் தூண்டப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்வது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது” எனத் தனது இன்ஸ்டா பதிவில் நடிகை தீபிகா கூறியிருக்கிறார். இந்தக் கருத்துகளுக்கு 17 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் லைக்ஸ்குகளைப் பதிவிட்டு கமெண்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தனது வாழ்க்கை குறித்து நடிகை தீபிகா பதிவிட்ட இந்த இன்ஸ்டா பதிவில் அவர் அணிந்து இருக்கும் ஆடை ரூ.95 ஆயிரம் என்பதையும் தற்போது ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. தேர்ந்த ஒரு நடிகை என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வரும் தீபிகா இந்த பதிவின் மூலம் தன்னை ஒரு ஸ்டைலிஷ் நடிகை என்றும் அடையாளப்படுத்தி இருக்கிறார்.

More News

வாயுக்கசிவால் சிகிச்சை பெற்றுவந்த 22 நோயாளிகள் உயிரிழப்பு… ம.பி. யில் நடந்த சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் செயல்பட்டு வந்த ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிவு ஏற்பட்டு 22 நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர்.

கர்ப்பமாக இருந்தபோது தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை: அதிர்ச்சி தகவல்

கர்ப்பமாக இருக்கும் போது தற்கொலைக்கு முயன்றதாக பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில், காவல் அதிகாரிக்கு சிறைதண்டனை...!

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை காவல் அதிகாரிகள் கொலை செய்ததை தொடர்ந்து, இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸிடம் சண்டைபோடும் பாலிவுட் நடிகை… வைரல் பதிவு!

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவத் துவங்கியபோது எப்படி  மக்களைப் பீதியில் வைத்து இருந்ததோ அதேபோல தற்போது இரண்டாவது அலையிலும் மக்கள் மத்தியில் கடும் சலிப்பை உண்டாக்கி இருக்கிறது.

ரிவைசிங் கமிட்டி சென்று 'யூ/ஏ' சான்றிதழ் பெற்ற பிரபல நடிகரின் படம்

ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் ஒன்றுக்கு  சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் தருவதாக கூறிய நிலையில் படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டி சென்று தற்போது 'யுஏ' சான்றிதழ் பெற்று உள்ளனர்