போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் நான்கு நடிகைகள் கைதா? பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Wednesday,September 23 2020]

திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்த தகவல் அவ்வப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது சம்பந்தமான வழக்கில் பாலிவுட் நடிகை ரியா மற்றும் கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் சில பிரபல நடிகைகள் சம்பந்தப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது நான்கு முக்கிய நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் தமிழ் நடிகை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான் மற்றும் சாரதா கபூர் ஆகியோரும் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகையான ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இவர்கள் விரைவில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் முன் ஆஜராவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர்கள் ஆஜரானதும் அவர்களிடம் விசாரணை செய்த அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர் என்பதும் தெரிந்ததே. அதேபோல் இந்த நான்கு நடிகைகளும் கைது செய்யப்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.