முத்தக்காட்சிக்கு கணவர் ஓகே சொன்னாரா? பதிலடி கொடுத்த தீபிகா படுகோன்!

  • IndiaGlitz, [Thursday,February 10 2022]

பாலிவுட் குயின் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் “கெஹ்ரயான்“ எனும் திரைப்படத்தில் முன்னணி நடிகர் சித்தார்த் சதுர்வேதியுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இயக்குநர் ஷகுன் பத்ரா இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் சித்தார் சதுர்வேதி, நடிகை அனனன்யா பாண்டே, தைரிய கர்வா போன்றோர் நடித்துள்ள திரைப்படம் “கெஹ்ரயான்“. இந்தத் திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. முன்னதாக இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் நடிகர் சித்தார்த் சதுர்வேதியும் நடிகை தீபிகாவும் நெருக்கமாக இருக்கும் பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதனால் நடிகை தீபிகா படுகோனை சிலர் இணையத்தில் விமர்சித்து ட்ரோல் செய்துவந்தனர். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துகெர்ணட நடிகை தீபிகாவிடம் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்கு உங்கள் கணவரிடம் அனுமதி பெற்றீர்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இதற்குப் பதிலளித்த நடிகை தீபிகா இதுபோன்ற முட்டாள்தனமான ட்ரோல்களை நான் கண்டுகொள்ளவில்லை. ரன்வீரும் படிக்க மாட்டார் என்று தெரியும்.

அவர் எனது நடிப்பை விரும்புவார் என்று நான் நினைக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்து அவர் பெருமைப்படுவார். என்னுடைய நடிப்பும் சிறப்பாக இருக்கும். மேலும் ஷுட்டிங்கில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் ஷகுன் பத்ராவிற்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகளாக வலம்வரும் நடிகை தீபிகாவும் நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தற்போது 4 ஆண்டுகளைக் கடந்து மகிழ்ச்சியான உறவுநிலையில் இருந்துவரும் இருவரும் தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தீபிகா தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் இணைந்து பான் இந்தியா திரைப்படம் ஒன்றில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிவகார்த்திகேயனின் 20வது படம் குறித்த சூப்பர் தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'டான்' என்ற திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும்

ஆஸ்கர் இறுதி பட்டியலில் இந்திய ஆவணப்படம்… கண்கலங்கிய பெண் இயக்குநர்!

94 ஆவது ஆஸ்கர் விருதிற்கான இறுதிப்பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஒரு ஆவணப்படம் இடம்பிடித்துள்ளது. ஏற்கனவே

500 ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாய் வரை: சமந்தாவின் சம்பளம்!

தற்போது ஒரு திரைப்படத்திற்கு சுமார் 5 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகை சமந்தா ஆரம்பகாலத்தில் 500 ரூபாய்க்காக வேலை பார்த்ததாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 

அஜித் படத்தை இயக்குகிறாரா 'எப்.ஐ.ஆர்' மனு ஆனந்த்? அவரே அளித்த பதில்!

cவிஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படம் நாளை ரிலீசாக உள்ளது. இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.

தயவுசெய்து இந்த படத்தை பாருங்கள்: விஜய்சேதுபதி படம் குறித்து சீமான்!

தயவு செய்து இந்த படத்தை அனைவரும் பாருங்கள் என விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் தெரிவித்துள்ளார்.