close
Choose your channels

ரஜினிக்கு எதிரான போத்ராவின் அவதூறு வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tuesday, December 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா என்பவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சினிமா ஃபைனான்சியர் போத்ரா என்றால் தமிழ் திரையுலகில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்ன பட்ஜெட் படம் முதல் சூப்பர் ஸ்டார் படம் வரை ஃபைனான்ஸ் செய்தவர். இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு கொடுத்த கடன் தொடர்பான வழக்கில் ரஜினி மீதும் புகார் கூறியிருந்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்திருந்த ரஜினிகாந்த், பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கில் தனது பெயரை இணைத்திருப்பதாக கூறியிருந்தார்.

இதனையடுத்து போத்ரா, ரஜினி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். தான் ரஜினியிடம் பணம் கேட்கவில்லை என்றும், அவர் என்னை களங்கப்படுத்தும் வகையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அவதூறு வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று சினிமா ஃபைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.