close
Choose your channels

கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய முதலமைச்சர்: ஏன் தெரியுமா?

Thursday, June 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய முதலமைச்சர்: ஏன் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் நல்ல நட்பு உண்டு என்பதும், கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தினத்தன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுனர் இல்லத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரின் உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பதே அவரது தர்ணா போராட்டத்திற்கு காரணமாக உள்ளது.

இந்த நிலையில் ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவதை ஏற்க முடியாது என்றும், டெல்லியில் நடப்பதற்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடப்பதற்கும் வித்தியாசம் இல்லை என்றும் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் கருத்துக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'டெல்லி மக்களுக்கு நான் தொடர்ந்து சேவை செய்ய நமது பிரதமர் அனுமதிப்பார் என்று நம்புகிறேன். பொதுமக்களுக்கு சேவை செய்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.