டெல்லி தீவிபத்து: உயிர் போகும் கடைசி நிமிடத்தில் நண்பனுக்கு போன் செய்த நபர்! 

  • IndiaGlitz, [Monday,December 09 2019]

டெல்லி தீ விபத்தில் சிக்கிய ஒரு நபர் உயிர் போகும் கடைசி நிமிடத்தில் ’என் குடும்பத்தைக் காப்பாற்று என உருக்கமாக போன் செய்து நண்பருக்கு சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.

டெல்லி அனாஜ் மண்டி என்ற பகுதியில் நேற்று நடைபெற்ற தீ விபத்தில் 44 பேர் பரிதாபமாக பலியாகினர் என்பதும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த விபத்தில் சிக்கிய முகமது முஷாரப் என்பவர் கடைசி நேரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் தன்னுடைய நண்பருக்கு போன் செய்து உருக்கமாக பேசிய செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

முகமது முஷாரப் தங்கியிருந்த கட்டடத்தை சுற்றிலும் தீ பரவியதை அடுத்து இனிமேல் உயிர் தப்பிக்க வழியே இல்லை என்ற நிலையில் உடனடியாக தனது மொபைல் போனை எடுத்து தனது உயிர் நண்பன் சோனு என்பவருக்கு போன் செய்துள்ளார். அதில் அவர் தான் ஒரு பெரிய தீ விபத்தில் சிக்கி உள்ளதாகவும் இனிமேல் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்றும் எனவே தயவு செய்து என் குடும்பத்தினரை நீதான் காப்பாற்ற வேண்டும் என்றும் நீ இருக்கின்றாய் என்ற நம்பிக்கையில் தான் இந்த உலகத்தை விட்டுச் செல்கிறேன் என்றும் உருக்கமாக பேசியுள்ளார் இதனையடுத்து சோனு, ‘உனக்கு ஒன்றும் நேராது பயப்படாமல் இரு என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தபோது திடீரென போன் கட்டாகிவிட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் டெல்லி சென்று புறப்பட்டு போது தனது நண்பன் முகமதுவை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது என்று சோனு கண்ணீர் மல்க கூறியுள்ளார்

உயிர் போகும் கடைசி நிமிடத்திலும் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற நண்பனுக்கு போன் செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்த விவகாரம்: சென்னையை மிஞ்சிய முக்கிய நகரம்

குழந்தைகள் ஆபாச படம் பார்த்த 3000 பேர் பட்டியல் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும், இது குறித்து விசாரணையை ஆரம்பிக்க இருப்பதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு

கவுதம் மேனனின் அடுத்த படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே

அஜித்தின் 'வலிமை' படத்தின் நாயகி குறித்த தகவல்

அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகவுள்ள 'வலிமை' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்தது.

அருண்விஜய்-அறிவழகன் படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்

அருண் விஜய் நடிக்கவிருக்கும் 31வது படத்தை 'ஈரம்' இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே 'குற்றம் 23'

ஆர்யா-சாயிஷாவுக்கு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!

நடிகர் ஆர்யாவும் அவருடைய மனைவியும் பிரபல நடிகை சாயிஷாவும் ஜோடியாக முதன் முதலில் நடித்து வரும் திரைப்படம் 'டெடி'. இந்த படத்தின் படப்பிடிப்பு க