தினகரனை தேடி வந்த டெல்லி போலீஸ். தீக்குளிக்க முயன்ற தொண்டரால் பரபரப்பு

  • IndiaGlitz, [Thursday,April 20 2017]

தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக டிடிவி தினகரனிடம் சம்மன் அளிக்க நேற்று இரவு டெல்லி போலீசார் சென்னைக்கு வந்தனர்.

டெல்லி உதவி கமிஷ்னர் சஞ்சய் ஷெராவத், ஆய்வாளர் நரேந்திரஷா ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் நேற்று தினகரனை நேரில் சந்தித்து வரும் சனிக்கிழமை விசாரணைக்காக டெல்லி வருமாறு கேட்டுக்கொண்டனர். இதுகுறித்த சம்மனையும் அவர்கள் நேரில் அளித்தனர்.

ஆனால் சம்மன் அளிக்க வந்த டெல்லி போலீசார், தினகரனை கைது செய்ய வந்திருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து உணர்ச்சிவசப்பட்ட தொண்டர் ஒருவர் தனது உடலில் மண்ணெணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரிடம் டெல்லி போலீசார் தினகரனை கைது செய்ய வரவில்லை என்று கூறி அதிமுக நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் டெல்லி போலீசாரிடம் இருந்து சம்மனை பெற்றுக்கொண்ட தினகரன் வரும் சனிக்கிழமை டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் நேரில் விசாரணை செய்த பின்னரே அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

சமந்தா எடுத்துள்ள புதிய சவால். ஒரு ஆச்சரிய வீடியோ

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தா தற்போது பிசியான நடிகைகளில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது விஜய்யுடன் 'தளபதி 61', விஷாலுடன் 'இரும்புத்திரை', விஜய்சேதுபதியுடன் 'அநீதி கதைகள்' மற்றும் ஒருசில தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார்...

டுவிட்டரை தெறிக்கவிட்ட சிம்பு ரசிகர்கள். ஒரே நாளில் 20 ஹேஷ்டேக்குகள்

சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் இரண்டு பாகங்களில் வெளிவரும் என்றும், சிங்கிள் பாடல் விரைவில் வெளிவருகிறது என்றும், நேற்று வெளியான தகவலால் டுவிட்டர் தெறிக்க ஆரம்பித்தது...

ஜெயலலிதா பங்களா அருகே ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது அவ்வபோது ஓய்வு எடுக்கும் இடம் சிறுதாவூர் பங்களா என்பது அனைவரும் அறிந்ததே. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த பங்களா, அவர் உயிருடன் இருந்தவரை கடும் பாதுகாப்பில் இருந்தது...

மணிரத்னம், முருகதாஸ், பாலா வெளியிடும் எச்சரிக்கை

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், பாலா ஆகியோர் இணைந்து ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடுகின்றனர். அந்த படத்தின் பெயர் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்'...

'நன்றி தலைவா'! சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சச்சின் பதில்

இந்திய கிரிக்கெட்டின் லிட்டில் மாஸ்டர் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.