close
Choose your channels

பெண் சாமியாருக்கு இருக்கை கொடுத்த காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்

Friday, October 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா சமிபத்தில் டெல்லியில் உள்ள விவேக்விஹார் காவல்நிலையத்திற்கு வருகை தந்தபோது அவருக்கு தனது இருக்கையை காவல்நிலையத்தின் அதிகாரி சஞ்சய் ஷர்மா தந்தது மட்டுமின்றி, பெண் சாமியாரின் சிகப்பு கலர் துப்பட்டாவை அவர் தனது கழுத்தில் அணிந்து கொண்டார். காவல்துறை சீருடை அணிந்து பணியில் இருக்கும்போது அவர் செய்த இந்த விஷயம் காட்டுத்தீ போன்று புகைப்படம் மற்றும் வீடியொ வடிவில் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் விவேக்விஹார் காவல்நிலைய அதிகாரி சஞ்சய் சர்மா மற்றும் அவருடன் இருந்த இன்னொரு அதிகாரி பிராஜ் பூஷன் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக டெல்லி துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

பெண் சாமியார் ராதே மா மீது பாலியல் வழக்கு, வரதட்சணை வழக்கு என இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவருக்கு காவல்துறை அதிகாரிகளே வி.ஐ.பி உபசரிப்பு அளித்துள்ளது காவல்துறைக்கு ஏற்பட்ட தலைகுனிவாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.