close
Choose your channels

பீட்டா பாதி, டெல்டா பாதி கலந்த கலவை.....! உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ்....!

Friday, June 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பீட்டா மற்றும் டெல்டா உள்ளிட்ட வைரஸ்களின் தன்மை, டெல்டா பிளஸ் வைரஸ்-ல் உருமாறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸானது இங்கிலாந்தில் தான் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டு,
இது பற்றிய அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டார்கள். இதையடுத்து நேபாளத்திலிருந்து வந்த 5 நபர்களிடம் உருமாறிய கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனாவின் 2-ஆம் அலை மக்களுக்கு ஏகப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை தந்துள்ளது.

இந்தநிலையில் டெல்டா வைரஸ் தான், தற்போது 'டெல்டா ப்ளஸ்' -ஆக உருமாறியுள்ளது. சென்ற வாரத்தில் மட்டும், சுமார் 11 நாடுகளில், 197 நபர்களுக்கு இந்த வகை தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் 40-க்கும் அதிகமான நபர்களுக்கும், மஹாராஷ்டிராவில் 20-க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 23-ஆம் தேதி, மத்தியப்பிரதேசத்தில் கொரோனவால் உயிரிழந்த ஒருவருக்கு, டெல்டா பிளஸ் வகை தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட , தடுப்பூசி செலுத்திக்கொண்ட 4 பேர் தொடரிலிருந்து குணமடைந்துள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரஸின், தன்மைகள் பற்றி மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. வேகமாக பரவுவது, நுரையீரலுக்கு சென்று அதன் செல்களோடு ஒட்டிக்கொள்ளுதல், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் குறைக்கும்தன்மை உள்ளிட்டவை இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள டெல்டா வைரஸின், ஸ்பைக் புரோட்டினில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தான், இதை டெல்டா பிளஸ் என கூறுகிறார்கள். இந்த வகையானது, தென் ஆப்பிரிக்காவில் இருந்த 'பீட்டா'-வின் உருமாற்றத்தில் இருந்த ஒன்றாகும். பீட்டா மற்றும் டெல்டா உள்ளிட்ட இரண்டுமே, உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸில் காணப்படுகின்றன. இந்த வகை தொற்றானது விரைவில் பரவி, நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துவதால், தடுப்பூசிகள் எந்த அளவிற்கு பாதுகாப்பை தரும் என்ற அச்சமும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.

மரபணு ஆய்விற்காக தமிழகத்தில் இருந்து 1159 மாதிரிகள் அனுப்பப்பட்டு, அதில் 772 மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளது. அதில் தமிழகத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.