close
Choose your channels

துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

Monday, June 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பதவிகளில் இருப்பவர்கள் சிலரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓபிஎஸ் சகோதரர் ராஜா அவர்களுக்கு உறுதியானதை அடுத்து அவரது டும்பத்தினர்களும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் அவருடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.