என்ன நடக்குது அபினவ்வுக்கும் பாவனிக்கும்: குறும்படம் அல்ல பெரும்படம் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்று பார்த்தவர்களுக்கு ராஜூ கேட்ட ஒரு கேள்வி பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். அப்படி என்ன கேள்வி கேட்டார் என்பது தெரியுமா? நேரடியாக அபினவ்விடம் ’பாவனியை நீங்க லவ் பண்ணுகிறீர்களா? என்று கேட்டது அபினவ் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் அபினவ்வை பார்த்து ராஜூ இப்படி ஒரு கேள்வி கேட்டதால் பிரியங்கா, நிரூப் ஆகியோர் ‘இது தவறு’ என ராஜூவை கண்டிக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் இன்று கண்டிக்கும் பிரியங்கா ஏற்கனவே இதே விஷயத்தை அபிஷேக்கிடமும் நிரூபிடமும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று அவர் நல்லவர் போல் ராஜுவை கண்டிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது.

அதேபோல் நேற்று அபிநவ் இடம் விளக்கம் கேட்கும் பாவனி, ‘உங்களிடம் அது மாதிரி எந்த எண்ணமும் இல்லை என்று நான் நம்புகிறேன்’ என்று கூறினார். ஆனால் அதே பாவனி தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுமிதாவிடம் அபினவ் தன்னிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் அவரது அணுகுமுறை குறித்தும் சில விஷயங்களை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அபிஷேக்கிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு அவரிடமும் இதுகுறித்து பேசியுள்ளார் என்பதும், சத்தியத்தை காப்பாற்றாமல் அதை பிரியங்காவிடம் அபிஷேக் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் இவ்வாறு நேரடியாக ராஜூ, அபினவ் இடம் கேட்டது சரிதான் என்றும் மனதில் ஒன்று வைத்துக்கொண்டு மற்றவர்களை போல் புறமாக பேசாமல் நேரடியாக கேட்ட அவருடைய நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது என்றும் பாவனி கூறியுள்ளார்.

மொத்தத்தில அபினவ், பாவனி இடையே என்ன நடக்கிறது என்பதை கீழே உள்ள குறும்படம் அல்ல பெரும்படத்தை பார்த்தால் உங்களுக்கு முழுவதுமாக புரியும்.

More News

வெளியில் ஒரு வதந்தி பரவுது: பிக்பாஸ் ரம்யாகிருஷ்ணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்று முதல் முறையாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பதும் அவரது பாணியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவராசியமாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மோசடி மன்னனுடன் முத்தம்: புகைப்படம் வைரலானதால் அதிர்ச்சியில் பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவர் மோசடி மன்னனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவனமாக இருக்க வேண்டும்: திரைப்படத்துறையை விமர்சனம் செய்வது குறித்து அண்ணாமலை கருத்து!

திரைப்படத் துறையை தேவையில்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் அவ்வாறு விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

கொரோனா வந்தாலும் கமல்ஹாசன் நன்றாக இருப்பதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் கமலஹாசன் நன்றாக இருக்கிறார் என்றால் அதற்கு இதுதான் காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புளூசட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

புளூசட்டை மாறன் இயக்கிய 'ஆன்டி இண்டியன்' என்ற திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புளூசட்டை மாறன் கூறியிருப்பதாவது: