பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல மறுத்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Monday,September 04 2017]

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேறு புதிய போட்டியாளர்கள் கிடைக்காததால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களே மீண்டும் மீண்டும் இடம்பெற்று வருகின்றனர். ஒரு வாரத்திற்கு மட்டும் என்று உள்ளே அனுப்பப்பட்ட ஜூலி, ஆர்த்திக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சக்தி நேற்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இந்த நிலையில் இந்தி பிக்பாஸ் 11வது பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபல நடிகை தேவோலீனா பட்டாச்சார்யா மறுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான்கானுடன் தான் நடிக்க விரும்புவதாகவும், அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார். இருப்பினும் தன்னை தேர்வு செய்த பிக்பாஸ் நிர்வாகிகளுக்கும் சேனலுக்கும் தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

ஏழைகள் ஏழைகளாகவே சாகவேண்டுமா? அனிதா மரணம் குறித்து சிவகுமார்

நீட் தேர்வு காரணமாக தனது இன்னுயிரை நீத்து கொண்ட அனிதா குறித்தும், இன்றைய கல்விமுறை, நீட் தேர்வால் பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள் குறித்தும் நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...

அடுத்த தலைமுறைக்கு சினிமாவை விட அரசியல் முக்கியம். விஜய்சேதுபதி

நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவின் மரணத்திற்காக சென்னை லயோலா கல்லூரியில் 'அனிதா நினைவேந்தல்' கூட்டம் நடைபெற்றது.

இது இன்னொரு சுதந்திர போராட்டம்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஆவேசம்

மருத்துவ படிப்பின் கனவு கலைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் துயர முடிவு தமிழகத்தில் உள்ள அனைவரையும் ஆத்திரம் கொள்ள வைத்த நிலையில் கமல்ஹாசன் போன்ற சமூக சிந்தனையுடன் மக்கள் மீது நல்ல அக்கறை கொண்டவர்களுக்கு இருமடங்கு ஆத்திரம் எழுந்துள்ளது...

தமிழக அரசின் நிதியுதவியை வாங்க மறுத்த அனிதாவின் சகோதரர்கள்

தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் குழப்பங்களால் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கவில்லை.

'மெர்சல்' அமெரிக்கா ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.