close
Choose your channels

மகன் கேட்ட ஒரே ஒரு கேள்வி: அதிர்ச்சியின் உச்சத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா?

Thursday, January 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 18 ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்த நிலையில் திடீரென இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ் - ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா தனது பெற்றோர் பிரிவு குறித்து கேட்ட ஒரே ஒரு கேள்வி இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிக்கு 15 வயதில் யாத்ரா என்ற மகனும், 11 வயதில் லிங்கா என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் யாத்ராவுக்கு 15 வயது என்பதால் கிட்டத்தட்ட மெச்சூரிட்டியாக இருப்பதாகவும், அவர் கேட்கும் கேள்விகளுக்கு சிலசமயம் ரஜினிகாந்தே பதில் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும் என்றும் அந்த அளவிற்கு அவர் புத்திசாலித்தனமாக வளர்ந்துள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நிரந்தரமாக பிரிந்தால் நீங்கள் யாருடன் இருக்க விரும்புகிறீர்கள் என யாத்ராவிடம் கேட்டதற்கு, ‘என் அம்மாவிடம் அவருடைய அப்பா அல்லது அம்மா இருவரில் யாராவது ஒருவருடன் தான் இருக்க வேண்டும் என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? என்றும் இதே கேள்வியை எனது அப்பாவிடம் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? என்றும் திருப்பி கேள்வி கேட்டதால் கேள்வி கேட்டவர்கள் வாயடைத்து விட்டதாக கூறப்படுகிறது.

யாத்ராவின் இந்த கேள்வி குறித்து ஐதராபாத்தில் இருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்ததாகவும் இந்த கேள்விக்கு அவர்கள் இருவராலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு திக்குமுக்காடி போனதாகவும் இதனால் மகன்களின் எதிர்காலம் கருதி மீண்டும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.