எட்டு வருடங்களுக்கு பின் 'ஜெயிலில்' இணைந்த தனுஷ்-ஜிவி பிரகாஷ்

  • IndiaGlitz, [Saturday,December 15 2018]

தமிழ் சினிமாவுலகில் ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். இவர் நடித்து முடித்துள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இவர் தற்போது 'ஐங்கரன்', 'அடங்காதே', 'குப்பத்து ராஜா', 'ஜெயில்', 'வாட்ச்மேன்', '100% காதல்', '4G', 'காதலை தேடி நித்யா நந்தா', 'ரெட்டக்கொம்பு' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் 'ஜெயில்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலை தனுஷ் பாடியுள்ளார். ஜிவி பிரகாஷ் மற்றும் தனுஷ் ஆகியோர் கருத்துவேறுபாட்டுடன் இருப்பதாக வெளிவந்து கொண்டிருந்த வதந்திக்கு முற்றுப்புள்ளியாக இந்த பாடல் அமைந்துள்ளது.

எட்டு வருடங்களுக்கு பின் மீண்டும் தனுஷ்-ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளது இருதரப்பு ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி என்பதில் சந்தேகமில்லை

More News

ஆறு நிமிட 'அடங்கமறு வீடியோ: வேற லெவல் என ரசிகர்கள் புகழாரம்

டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரவுள்ள ஐந்து முக்கிய படங்களில் ஒன்று 'அடங்கமறு'. இந்த போட்டியிலும் தைரியமாக ஒரு படம் வெளிவருகிறது என்றால் படக்குழுவினர்களுக்கு தங்கள் படைப்பின் மீது இருக்கும்

'வேட்டி கட்டு' 'விஸ்வாசம்' பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'அடிச்சு தூக்கு' பாடல் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பது தெரிந்ததே.

ஒரு மலையே சிலையானது: கருணாநிதிக்கு வைரமுத்து எழுதிய கவிதை

கருணாநிதிக்கு நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முழு உருவச்சிலை வைக்கவுள்ள நிலையில், கருணாநிதியின் நெருங்கிய நண்பராக கவியரசு வைரமுத்து அவருக்காக வடித்துள்ள கவிதைச்சிலை தான் இந்த கவிதை

நடுரோட்டில் நயன்தாராவை கட்டிப்பிடித்தது யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ

'வேலைக்காரன்' படத்திற்கு பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார்

ஆட்டோ ஓட்டுனரின் மகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் செய்த உதவி

தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம், ஒரு ரசிகர் மன்றமாக மட்டுமின்றி அவ்வப்பொது சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே.