close
Choose your channels

தனுஷ்-மாரி செல்வராஜ் திரைப்படம் குறித்த முக்கிய தகவல்கள்

Friday, December 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய சுருளி மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய ‘பட்டாஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்துவிட்டது.

இந்த இரண்டு படங்களின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் உள்ளது

இந்த நிலையில் இந்தப் படம் நெல்லையை பின்னணியாகக் கொண்ட கதை அம்சம் கொண்டது என்றும் இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நெல்லை உள்பட தென் தமிழ்நாட்டில் தான் நடைபெற இருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

அசுரன் படத்தை தயாரித்த கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு கர்ணன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.