மீண்டும் தனுஷ் - மாரி செல்வராஜ் இணைகிறார்களா?

  • IndiaGlitz, [Saturday,March 18 2023]

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’கர்ணன்’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் மீண்டும் இருவரும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ என்ற படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மாரி செல்வராஜ் தற்போது முன்னணி ஓடிடி தளத்திற்காக ‘வாழை’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் ரிலீஸ் கொடுத்த அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அடுத்ததாக மாரி செல்வராஜ், துருவி விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது மீண்டும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் இணைய வருவதாக கூறப்படுகிறது

அதாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தை தனுஷ் தயாரிக்க இருப்பதாகவும், நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. துருவ் விக்ரம் படத்தை முடித்துவிட்டு இயக்கி முடித்தவுடன் மாரி செல்வராஜ், தனுஷ் தயாரிக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.