தனுஷ்-ராம்குமார் படம் குறித்த புதிய தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,January 22 2020]

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகிவரும் 'கர்ணன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக அவர் 'ராட்சஸன்' இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் ஒரு ஃபேன்டஸி ஆக்சன் அட்வென்ச்சர் திரைப்படமாக உருவாகி இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்திற்காக இயக்குனர் ராம்குமார் பல்வேறு தகவல்களை திரட்டி வருவதால் தமிழ் சினிமாவிற்கு இந்த படம் ஒரு புதிய பரிணாமமாக இருக்கும் என கருதப்படுகிறது.

மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இன்னும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.

More News

அந்த பத்து பேர்களில் அஜித் ரசிகர்கள் சிக்குவார்களா?

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களும் நடிகை கஸ்தூரியும் காரசாரமாக மோதிக்கொண்டு வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆபாச பதிவு செய்பவர்கள்

'மாஸ்டர்' படத்தின் புதிய ஸ்டில்: இணையதளங்களில் வைரல்

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும்,

ரஜினிகாந்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறிய அறிவுரை

சென்னை  - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 43 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 9 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாயார் திடீர் ஓட்டம்: திருமண வீட்டில் பரபரப்பு

அடுத்த மாதம் ஒரு திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மணமகனின் தந்தையும் மணமகளின் தாயார் ஓடிப் போய்விட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

தைரியமாக பேசினால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: திரெளபதி இயக்குனர்

உண்மையை தைரியமாக பேசுபவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என சர்ச்சைக்குரிய படம் என்று கூறப்படும் திரெளபதி என்ற திரைப்படத்தை இயக்கிய மோகன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்