close
Choose your channels

தனுஷின் சொகுசு கார் நுழைவு வழக்கு: சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதி

Thursday, August 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் சொகுசு கார் வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் நடந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று தனுஷின் சொகுசு கார் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷன் வழக்கறிஞர் மனுவை திரும்பப் பெறுவதாகவும் வரும் திங்கட்கிழமைக்குள் நுழைவு வரியை கட்ட தயார் என்றும் எனவே மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கூறினார்

மனுவை திரும்ப பெற அனுமதிக்க முடியாது என கூறிய நீதிபதி, தனுஷ் தனது மனுவில் ஏன் தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தார் என்பதற்கான காரணத்தை கூற வேண்டும் என்றும் தெரிவித்தார். சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி இன்று மதியம் 2.30 மணிக்குள் தனுஷ் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்

பால்காரர் கூட பெட்ரோலுக்கான ஜிஎஸ்டி வரியை கட்டும்போது, உங்களால் முடியவில்லையா? ஜிஎஸ்டி செலுத்த முடியவில்லை என பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறாரா? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார். இதனையடுத்து இன்று மதியம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.