close
Choose your channels

வடசென்னை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்!

Monday, July 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'வடசென்னை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளன என்பது தெரிந்ததே. தனுஷ் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'அசுரன்' மற்றும் துரைசெந்தில்குமார் படங்களை முடித்தவுடன் 'வடசென்னை 2' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் 'வடசென்னை 2' படம் கைவிடப்பட்டுவிட்டதாகவும், அதற்கு பதிலாக வடசென்னை 2' மற்றும் 'வடசென்னை 3' ஆகிய திரைப்படங்கள் வெப் சீரிஸாக உருவாக்க தனுஷ் திட்டமிட்டிருப்பதாகவும் ஒருசில இணையதளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த செய்தியை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் மறுத்துள்ளார்.

'வடசென்னை 2' திரைப்படத்தின் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், இந்த படம் மட்டுமின்றி தனது அனைத்து படங்கள் குறித்தும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியாகும் தகவல்களை மட்டுமே தனது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதனைவிடுத்து பரவிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தனுஷ் தனது ரசிகர்களுக்கு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஒரு டுவீட் மூலம் 'வடசென்னை 2' குறித்த வதந்திக்கு தனுஷ் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.