close
Choose your channels

தனுஷ் படத்திலும் ஒரு சமூக கருத்து: மாரி செல்வராஜ்

Monday, September 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஜாதி பாகுபாடு குறித்து பேசிய நிலையில் அடுத்து அவர் இயக்கவுள்ள தனுஷ் படத்திலும் ஒரு சமூக கருத்தை வலியுறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பரியேறும் பெருமாள்' படத்திற்காக மாரி செல்வராஜூக்கு சமீபத்தில் புதுவை அரசு விருது கொடுத்தது. இந்த விருதை பெற்றுக்கொண்ட பின்னர் மாரி செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'பரியேறும் பெருமாள் படத்தை பார்த்தபின்னர் தனுஷ் தனது அடுத்த படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளார். முதல் படம் போலவே இந்த படத்திலும் ஒரு அழுத்தமான சமூக கருத்தை வலியுறுத்தவுள்ளேன். இந்த காலத்திற்கு தேவையான முக்கிய கருத்தை தனுஷ் படத்தில் தெரிவிக்கவுள்ளேன்' என்று மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

தனுஷ் - மாரி செல்வராஜ் முதல்முறையாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கும் என்றும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் கேங்க்ஸ்டர் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.