அண்ணிக்கு பிரபல நடிகர் கொடுத்த வித்தியாசமான பரிசு!

  • IndiaGlitz, [Wednesday,November 20 2019]

நடிகர் தனுஷ் தனது அண்ணி கீதாஞ்சலி செல்வராகவன் அவர்களுக்கு வித்தியாசமான பரிசு கொடுத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலிக்கு அவ்வப்போது வித்தியாசமான பரிசுகள் கொடுத்து அசத்தும் நடிகர் தனுஷ், தற்போது இரண்டு புத்தகங்களை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

The Hunting Party மற்றும் The Silence Of the Girls என்ற இரண்டு புத்தகங்களும் தனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் என்றும் இந்த புத்தகங்களின் சிறப்பு குறித்தும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கீதாஞ்சலி வெளியிட்டுள்ளார்.

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவருக்கும் இந்த புத்தகங்கள் பரிசாக கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்கள் என்றும் அதே போன்ற ஒரு உணர்வில்தான் தற்போது இருப்பதாகவும் கீதாஞ்சலி செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த இரண்டு புத்தகங்களையும் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணிக்கு அசத்தலான பரிசு கொடுத்து அசத்திய நடிகர் தனுசுக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 

More News

நயன்தாரா பிறந்தநாளில் சிங்கப்பூர் ரசிகர் செய்த அர்ச்சனை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர் என்பதும் அவருடைய பிறந்தநாளுக்கு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும்

தெலுங்கு சினிமா எனக்கு இன்னொரு வீடு: ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமலஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் லாபம்

ரசிகர்களுக்கு படிப்படியாக இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்-ரஜினி!

சமூக வலைதளங்களில் தற்போது அஜீத், விஜய் ரசிகர்கள் எவ்வாறு மோதிக் கொள்கின்றார்களோ அதேபோல் பல ஆண்டுகளாக கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் மோதிக் கொண்டிருந்தார்கள்

நடுரோட்டில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை: காதல் தோல்வியா?

கோவையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பில்கேட்ஸை சந்தித்த பிரபல நடிகரின் மனைவி

மைக்ரோசாஃப்ட் தலைவரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான பில் கேட்ஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.