close
Choose your channels

சிம்பு படத்திற்கு ஏற்பட்ட அதே சிக்கல் தனுஷ் படத்திற்கும்...

Tuesday, February 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு படத்திற்கு ஏற்பட்ட அதே சிக்கல் தனுஷ் படத்திற்கு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளிவருமா? அல்லது ஓடிடியில் வெளிவருமா? என்பது குறித்த இறுதி முடிவு இன்னும் தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை ஒரே நேரத்தில் இந்தியாவில் திரையரங்கிலும் வெளிநாட்டில் ஓடிடியிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டால் இது சாத்தியம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு முன்னர் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் இதே போன்று இந்தியாவில் திரையரங்கிலும் வெளிநாட்டில் ஓடிடியிலும் வெளியிட முடிவு செய்தபோது திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக ஓடிடி ரிலீஸ் முடிவு தள்ளி வைக்கப்பட்டது. அதேபோல் ஒரே நேரத்தில் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரண்டிலும் ‘ஜகமே தந்திரம்’ படத்தையும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. எனவே தயாரிப்பாளரின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.