'கர்ணன்' படப்பிடிப்பு குறித்து தனுஷின் முக்கிய டுவீட்!

  • IndiaGlitz, [Monday,February 24 2020]

தனுஷ் நடித்த ’அசுரன்’ மற்றும் ’பட்டாஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது அவர் என்ற ’ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது

இந்த நிலையில் ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் தனுஷ் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வந்தது

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் அதுமட்டுமின்றி இந்த படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் தனுஷ் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் கூறப்படுகிறது

தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ரஜினி ஆஜராவதற்கு விலக்கு? விசாரணை ஆணையம் அதிரடி முடிவு

கடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் நூறாவது நாள் போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது.

அதிபர் ட்ரம்பை கட்டித் தழுவி வரேவேற்றார் பிரதமர் நரேந்திர  மோடி

அதிபர் ட்ரம்ப்பின் விமானம் குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

ட்ரம்ப் வருகையால் விழாக் கோலாம் பூண்ட அகமதாபாத் – ஏற்பாடுகள், செலவுகள் குறித்த தொகுப்பு

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்

'தலைவர் 168'ல் இணைந்த பிரபல எழுத்தாளர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 168' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது

பிரபல பாடகரின் ஸ்டூடியோவில் மர்மமாக மரணமடைந்த இளம்பெண்: பரபரப்பு தகவல் 

மும்பையைச் சேர்ந்த பிரபல பாடகர் மிகா சிங் என்பவருக்கு மும்பை அந்தேரியில் சொந்தமாக ஸ்டுடியோ ஒன்று உள்ளது. இந்த ஸ்டூடியோவின் மேனேஜராக இளம்பெண் சௌமியா என்பவர்