இன்று முதல் தொடங்கும் தனுஷின் புதிய படத்தின் படப்பிடிப்பு

  • IndiaGlitz, [Monday,January 22 2018]

தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் இன்று முதல் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'மாரி' படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

தனுஷ், சாய்பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இவரது இசையில் இசைஞானி பாடிய பாடல் ஒன்று இந்த படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இந்த படத்தை இயக்கவுள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.

 

More News

அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி அறிவித்த முதல்கட்ட நிர்வாகிகள் லிஸ்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இருபது ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.

நான் ஏன் அரசியலுக்கு வந்தேன்: ரசிகர்களிடம் கமல்ஹாசன் விளக்கம்

நாட்டில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவை சரியாக இல்லை. அவற்றை டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

'உதிரிப்பூக்கள்', 'முள்ளும் மலரும்' உள்பட பல திரைப்படங்களை இயக்கியவரும் சமீபத்தில் தளபதி விஜய்யின் 'தெறி' படத்தில் வில்லனாக நடித்தவருமான பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன்

ஜோதிகாவின் 'நாச்சியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் பிரபல இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

பொங்கல் படங்களின் 2வது வார வசூல் நிலவரம்

கடந்த பொங்கல் விருந்தாக சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', விக்ரமின் 'ஸ்கெட்ச்' மற்றும் பிரபுதேவாவின் 'குலேபகாவலி' ஆகிய திரைப்படங்கள் வெளியானது.