close
Choose your channels

முடிவுக்கு வந்தது தனுஷின் அடுத்த படம்: படக்குழுவினர் கொண்டாட்டம்

Thursday, December 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’அசுரன்’ மற்றும் ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த இரண்டு திரைப்படங்களும் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த ’சுருளி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக லண்டனில் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்த படத்தின் டப்பிங் மற்றும் பின்னணி இசை குறித்த தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ், சினேகா நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’பட்டாஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் படப்பிடிப்பு முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள சுருளி மற்றும் ‘பட்டாஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் 2020ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே வெளிவரவிருக்கும் இருக்கிறது என்பது தனுஷ் ரசிகர்களுக்கான ஒரு சந்தோசமான செய்தி ஆகும்.

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம், விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.