கிராமத்து தென்றலாகும் ப்ரியா பவானிசங்கர்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

பிரியா பவானி சங்கர் கிராமத்து தென்றல் கேரக்டரில் நடித்து வருவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தனுஷ் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை நடிகர்களின் கேரக்டர் குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. முதல் கட்டமாக ராஷி கண்ணா, அனுஷா என்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும் அவர் தனுஷின் பள்ளிகால தோழி கேரக்டரில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து பிரியா பவானி சங்கர் கிராமத்து தென்றலாக ’ரஞ்சனி’ என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தனுஷ், ராஷிகண்ணா, ப்ரியா பவானிசங்கர், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்பட பலர் நடித்த இந்தத் திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நம்பவே முடியவில்லை: 'விக்ரம்' வசூல் குறித்து உதயநிதி  பதிவு!

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து

மருத்துவத் துறையில் ஒரு மைல்கல் சாதனை… புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு!

உயிர்க்கொல்லி நோயாகக் கருதப்படும் புற்றுநோய்க்கு நிரந்தர

வீட்டில் யானை தந்தங்கள்… பிரபல சூப்பர் ஸ்டார் நடிகருக்கு ஏற்பட்ட புது நெருக்கடி!

பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்': ஃபர்ஸ்ட்லுக் டிரெண்டே முடியாத நிலையில் செகண்ட்லுக்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20வது திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் 'பிரின்ஸ்' என்று வைக்கப்பட்டுள்ள

அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸ் ஆகும் யாஷிகாவின் இரண்டு படங்கள்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் யாஷிகா ஆனந்த் கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் நடித்த பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டன.