close
Choose your channels

இன்னும் 3 வருடங்களுக்கு அந்த தனுஷை பார்க்க முடியாது: டுவிட்டர் ஸ்பேஸில் தனுஷ் பேட்டி

Tuesday, June 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டுவிட்டர் ஸ்பேஸ் தளத்தில் தனுஷ் உரையாடிய சில கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டுவிட்டர் ஸ்பேஸ் தளத்தில் ‘ஜகமே தந்திரம்’ குழுவினர் உரையாடியபோது, அதில் தனுஷ் பேசியபோது, ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகம் போல் ’ஜகமே தந்திரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசை என்று கூறினார். முதலில் இந்த படத்திற்கு ’சுருளி’ என்றுதான் டைட்டில் வைக்கப்பட்டதாகவும் அதன்பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்திற்கு சரியான தலைப்பை தேர்வு செய்து ’ஜகமே தந்திரம்’ என்று மாற்றியதாகவும், அவருக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.

’ஜகமே தந்திரம்’ படத்தில் ஆங்காங்கே ரஜினிகாந்த் சாயல் இருக்கும் என்றும் கார்த்திக் சுப்புராஜ் அதனை அனுமதித்தார் என்றும் அதனால் ரஜினி ரசிகர்கள் தயவு செய்து திட்ட வேண்டாம் என்றும் நடிப்பை ரசியுங்ன்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் ஹாலிவுட்டில் தனக்கு 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு என்றும் ஆனால் ரிகர்சல் காரணமாகத்தான் அதிக நாட்கள் தங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு என்னை பாராட்டிய அனைவருக்கும் நன்றி என்றும் இந்த வாய்ப்பை சரியானபடி பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்

அமெரிக்காவில் இருப்பது சில சமயம் கஷ்டமாக உள்ளது என்றும் ஆனால் ரசிகர்கள் அன்பால் அது தெரியவில்லை என்றும் இன்னும் இருபது நாட்கள் தான் படப்பிடிப்பு அதன்பின் சென்னை வர இருப்பதாகவும் அம்மாவின் கையால் சாப்பிடவேண்டும் என்று ஆசையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

மேலும் இன்னும் சில ஆண்டுகளுக்கு திறமையான இயக்குனர்கள் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை என்று மூன்று ஆண்டுகளுக்கு இயக்குனர் தனுசை பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.