பத்து தல ராவணனா, பாஞ்சு வரும் போர் முரசு: தனுஷின் 'வாத்தி' சிங்கிள் பாடல்

  • IndiaGlitz, [Tuesday,January 17 2023]

தனுஷ் நடித்த ‘வாத்தி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கிவிட்டன.

ஏற்கனவே ‘வாத்தி’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடல் ஆன 'நாடோடி மன்னன்’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ளது. ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார் என்பதும் யுவபாரதி இந்த பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில் இந்த பாடல் நிச்சயம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ள இந்த படத்தில் சாய்குமார், சமுத்திரகனி, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலன் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகிய இந்த படம் தனுஷின் அடுத்த வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியாகியுள்ள பாடலின் சில வரிகள் இதோ:

நாடோடி மன்னன் நான் போற பாதையில
போனாலே சேதமில்லை தாலேலோ

ஆத்தாவா அந்த ஆகாசம் கூட வர
வேறேதும் தேவையில்ல தாலேலோ

பள்ளத்துல கால் இருந்தும்
பல்லக்குல ஏன் பவுசு
பஞ்சம் பசி பாக்கயில்லும்
அள்ளித்தரும் பூ மனசு

பத்து தல ராவணனா
பாஞ்சு வரும் போர் முரசு
மெட்டெடுத்து பாடயில
நானும் கவிப்பேரரசு

தொன்னையில சோறு
தொட்டியில நீரு
என்ன நடந்தாலும்
இல்ல இல்ல கண்ணீரு இல்ல


 

More News

வந்துவிட்டது பணமூட்டை... பணத்தோடு கிளம்பும் பிக்பாஸ் போட்டியாளர் யார்?

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனின் பண மூட்டை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சுத்தி சுத்தி அடித்த நடிகர் சூரி காளை.. என்ன ஆச்சு தெரியுமா?

 இன்று நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடிகர் சூரியின் மாடு சுத்தி சுத்தி அடித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

பணத்திற்காக மட்டுமே நடிக்க வந்தேன்.. பிரபல நடிகையின் ஓப்பன் டாக்!

 ரசிகர்களை மகிழ்விக்கவும் கலை சேவை செய்வதற்காக தான் நடிக்க வந்தேன் என பல நடிகைகள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் பிரபல நடிகை ஒருவர் பணத்திற்காக தான் நடிக்க வந்தேன்

படுக்கையறையில் சன்னிலியோன் உதட்டில் காயம்.. யார் காரணம்? வைரல் வீடியோ

 தன்னுடைய உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக சன்னிலியோன் படுக்கை அறையில் எடுத்த செல்ஃபி வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. 

36 நாள், ஏக் தம்மில் ஒரே ஷெட்யூல்ட்.. எஸ்.ஜே.சூர்யா சொன்ன ஆச்சரிய தகவல்

தமிழ் திரை உலகில் மீண்டும் பிஸியாகி உள்ள எஸ்ஜே சூர்யா தான் நடித்து வரும் அடுத்த திரைப்படம் 36 நாட்களில் ஒரே செட்டியூரில் எடுக்கப்பட்டு வருவது குறித்து ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.