தனுஷின் 'வாத்தி' செம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.. காத்திருக்கும் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Monday,February 06 2023]

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் செம அப்டேட்டை பட குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி சற்று முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வாத்தி’ படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சற்றுமுன் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘வாத்தி’ ட்ரைலர் பிப்ரவரி 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து இன்னும் இரண்டு நாட்கள் ரசிகர்கள் இந்த ட்ரெய்லருக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சம்யுக்தா, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படம் தனுஷூக்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்.. 'துணிவு' நடிகரும் இணைந்தார்..!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடத்தி வருகிறார்

'வாரிசு' மொத்த வசூல் எவ்வளவு.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் ஆரம்பம் முதலே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலை வாரி குவித்தது என்பதையும் பார்த்தோம்.

விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: எச்சரிக்கை விடுத்த பிக்பாஸ் விஜே மகேஸ்வரி..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீசனின் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான மகேஸ்வரி

பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதி பெயரை நீக்கிய தனுஷ் பட நடிகை: நெட்டிசன்கள் பாராட்டு..!

 தனது பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதி பெயரை நீக்கியதாக 'வாத்தி' பட நடிகை தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

துருக்கி நிலநடுக்கத்தில் 1300 பேர் பலி: உடனடி உதவிக்கரம் நீட்டிய இந்தியா..!

துருக்கியில் இன்று காலை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து 1300 பேர் இதுவரை பலியாகி உள்ளதாகவும் மீட்ப பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாகவும்