தனுஷின் 'மாரி' சென்சார் விபரங்கள்

  • IndiaGlitz, [Tuesday,July 07 2015]

வேலையில்லா பட்டதாரி, அனேகன் ஆகிய இரண்டு தொடர் வெற்றி படங்களை கொடுத்த நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாரி படம் சென்சார் அதிகாரிகளால் சென்சார் செய்யப்பட்டதாகவும், படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

தனுஷ், காஜல் அகர்வால், விஜய் ஜேசுதாஸ், ரோபோ சங்கர், காளி வெங்கட், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் அனிருத் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை 'வாயை மூடி பேசவும்', காதலில் சொதப்புவது எப்படி' போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார். ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் இந்த படத்தை சுமார் ரூ.25 கோடியில் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் சென்சார் விபரங்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த படம் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் மற்றும் டிரைலர்கள் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களிடம் இருந்தும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நயன்தாராவின் 'மாயா' ரிலீஸ் தேதி?

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்பிற்கு உரிய திரைப்படமான 'மாயா' வரும் 24ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது...

10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணையும் அபூர்வ சகோதரர்கள்

பிரபல இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் படங்களை இயக்கிய மூத்த இயக்குனர்......

'தலைவா' படத்திற்கு பின்னர் விஜய்யுடன் மீண்டும் இணையும் 'வி.ஐ.பி'

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் பாடல்கள் வெளியீடு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது அனைவரும் அறிவோம்.......

பிரகாஷ் ராஜுடன் மீண்டும் இணையும் திமிரு நடிகை

தேசிய விருது பெற்ற திரைப்படமான 'காஞ்சிவரம்' படத்தில் இணைந்த இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் பிரகாஷ்ராஜ் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக வெளிவந்த செய்தியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம்......

கமல் பெயரில் ஒரு வங்கி கொள்ளை படம்

உலக நாயகன் கமல்ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்னர் 'மய்யம்' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார்......