close
Choose your channels

பவர்பாண்டி' படப்பிடிப்பு முடிவது எப்போது? தனுஷ் தகவல்

Thursday, February 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய தனுஷ் முதன்முதலில் இயக்கி வரும் திரைப்படம் 'பவர் பாண்டி'. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை இயக்குவதோடு முக்கிய வேடத்திலும் தனுஷ் நடிக்கின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே மீதியிருப்பதாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்தவுடன் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு வரும் ஏப்ரலில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூ ராமன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைக்கின்றார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரசன்னா எடிட்டிங் செய்கிறார்.

இந்த படத்தின் பணிகள் முடிந்தவுடன் தனுஷ், வெற்றிமாறனின் 'வடசென்னை' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.