close
Choose your channels

தனுஷின் அடுத்த படத்தை தயாரிக்கும் நிறுவனம்: அதிரடி அறிவிப்பு!

Friday, July 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் குறித்த அதிரடி அறிவிப்பு சற்றுமுன் வெளிவந்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘தி க்ரே மேன்’ என்ற திரைப்படம் ஜூலை 22ஆம் தேதியும், ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ’நானே வருவேன்’ மற்றும் ‘வாத்தி’ திரைப்படங்களின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து உள்ளது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதிகளும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த மிகப்பெரிய அறிவிப்பு நாளை மாலை 05.30 மணிக்கு வெளியாகும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்த ’மாறன்’ என்ற திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.