நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்துவிட்டோம்: புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த்த தனுஷ் 

  • IndiaGlitz, [Monday,March 07 2022]

நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் இணைந்து விட்டோம் என தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

தனுஷ் தற்போது ’வாத்தி’ என்ற தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் தங்கி இருந்தார். இதன் காரணமாக சென்னை பக்கம் வராமல் இருந்த தனுஷ் தற்போது தான் அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார் .

சென்னையில் உள்ள தனது வீட்டில் தனக்காக காத்திருந்த செல்ல நாய்க்குட்டிகளை நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பார்த்து  அவைகளுடன் கொஞ்சி விளையாடும்போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் தனுஷ் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்த செல்லப் பிராணிகளுடன் இணைந்து உள்ளதை அடுத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘மாறன்’, ‘தி க்ரே மேன்’ மற்றும் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கைக்கு இசைஞானி அளித்த பதில்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கைக்கு இசைஞானி இளையராஜா பதிலளித்துள்ளதை அடுத்து அவரது பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது 

மீண்டும் தொடங்குகிறதா 'வேட்டை மன்னன்'? சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்து!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பு நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'வேட்டை மன்னன்' என்ற திரைப்படம் உருவாகி வந்த நிலையில் திடீரென அந்த படம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர்தான் நெல்சன்

மீண்டும் தென்னிந்திய திரைப்படத்தில் சன்னிலியோன்: ஹீரோ யார் தெரியுமா?

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சன்னிலியோன் அவ்வபோது தென்னிந்திய திரையுலகில் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த பொண்ணை தூக்கிட்டான்னா செம வொர்த்: 'எதற்கும் துணிந்தவன்' புரமோ வீடியோ

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விறுவிறுப்பாக

மீண்டும் மருத்துவமனையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அனுமதி: என்ன ஆச்சு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதன் பின் வீடு