லாஸ் ஏஞ்சலில் 'கர்ணன்' படம் பார்த்த தனுஷ்: சொன்ன கமெண்ட் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,April 10 2021]

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் அவருடைய ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி திரை உலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் இந்த படத்தை பார்த்து தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தனுஷ், மாரி செல்வராஜ் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் தமிழகத்தில் இந்த படத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்கில் இந்த படத்தை அவர் குடும்பத்துடன் பார்த்து ரசித்துள்ளார்.

நேற்று இரவு ‘கர்ணன்’ படத்தின் சிறப்பு காட்சியை தனது குடும்பத்துடன் பார்த்த தனுஷ் இந்த படத்தின் அவுட்புட்டை பார்த்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையிலும் இந்த படத்துக்கு தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது கண்டு தனது மகிழ்ச்சியையும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு...! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!

நடப்பாண்டில் தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக திறனறி தேர்வு நடத்தவேண்டும் என்று  பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. 

கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி… அதிர்ச்சி சம்பவம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 3 பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

மனசார சொல்றேன், நல்லா வருவ.. : மனம்திறந்து விஜய்சேதுபதி பாராட்டிய வீடியோ!

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தைப் பார்த்த பிரபல நடிகர் ஒருவர் இயக்குனர் மாரி செல்வராஜை பார்த்து 'மனம் திறந்து சொல்றேன் நீ நல்லா வருவ' என்று பாராட்டிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பப்ஜிக்கு அடிமையான இளைஞர் நிஜத்தில் துப்பாக்கியைத் தூக்கியச் சம்பவம்… 2 பேர் உயிரிழப்பு!

சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி அதனால் மனஅழுத்தத்தோடு இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

10 ரூபாய் டாக்டர் மறைவு....! ஊரே சேர்ந்து செய்த இறுதிச்சடங்கு...!

பழைய வண்ணாரப்பேட்டையில் 10 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்து வந்த மருத்துவர் கோபாலன் உடல்நலக்குறைப்பாடு உயிரிழந்தார்.