'டிடி' நடிப்பை பார்த்து ஆச்சரியம் அடைந்த தனுஷ்

  • IndiaGlitz, [Monday,February 20 2017]

பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி என்ற திவ்யதர்ஷினி தனுஷ் இயக்கும் 'பவர் பாண்டி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் டிடி நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பின்போது டிடியின் நடிப்பை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை மிக எளிமையாக கையாண்டு தன்னம்பிகையுடன் நடித்ததாகவும், அவருடைய நடிப்பை பார்த்து மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்ததாக தனுஷ் பதிவு செய்துள்ளார்

ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடைய உள்ளது. இந்த படத்தில் இயக்குனர் கவுதம் மேனன், ராணா ஆகியோர்களும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூ ராமன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைக்கின்றார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரசன்னா எடிட்டிங் செய்கிறார்.

More News

தோனியின் திடீர் விலகல் முடிவு. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய தல தோனி, தற்போது திடீரென ஐபிஎல் போட்டி தொடரில் புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவாஜி புரடொக்ஷன்ஸ் அடுத்த தயாரிப்பில் விஜய், விஜய்சேதுபதி, ராகவா லாரன்ஸ்?

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகிய சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' என்ற சூப்பர்ர் ஹிட் படத்தையும், அதன் பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து கடந்த 2010ஆம் ஆண்டு அஜித் நடித்த 'அசல்' ஆகிய படங்களை தயாரித்தது.

சரியான நேரத்தில் தல ரசிகர்களின் சரியான சமுதாய பணி

நடிகர்களின் ரசிகர்கள் என்றால் படம் வெளியாகும் தினத்தில் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்பவர்கள் மட்டுமின்றி ஆக்கபூர்வமான சமுதாய பணிகளிலும் ஈடுபடுபவர்கள் என்பது அவ்வப்போது நிரூபணம் ஆகிக்கொண்டு வருகிறது

திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற மாறுவேடத்தில் காவல்துறை அதிகாரி. புகைப்பட ஆதாரம்

தமிழக சட்டமன்றத்தில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற பெயரில் நடந்த ஜனநாயக கேலிக்கூத்தை அனைவரும் அறிவோம்.

ஜல்லிக்கட்டு மாணவர்களுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் செய்த உலக சாதனை

கடந்த மாதம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் உலகின் கவனத்தை மெரீனா நோக்கி திரும்ப வைத்தது