ஒரே நேரத்தில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் படம்.. தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஒரே நேரத்தில் தனுஷ் நடிக்கும் ’இட்லி கடை’, சிம்பு நடிக்கும் 49வது படம், சிவகார்த்திகேயன் நடிக்கும் ’பராக்சக்தி’ ஆகிய படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை கே.பி.என். தாசன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் தற்போது சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படும் நிலையில், அவருடைய திருமணத்தை கூட முதலமைச்சர் ஸ்டாலின் தான் நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவருடைய திருமணத்திற்கு நயன்தாரா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வருகை தந்திருந்தார்கள்.
டான் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ஆகாஷ் பாஸ்கரன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று முன்னணி நடிகர்களுடன் படங்களை தயாரித்து வரும் நிலையில், தற்போது திடீரென அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோதனைக்கு பின்னரே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments