இனியும் நடக்கக்கூடாது இதுபோன்ற ஒரு விபத்து: தனுஷ்

  • IndiaGlitz, [Thursday,February 20 2020]

நேற்றிரவு ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த கோர விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா உள்பட மூவர் பரிதாபமாக பலியான சம்பவம் படக்குழுவினர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ஷங்கர் உள்பட பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த விபத்தால் பலியான மூவரின் குடும்பத்தினர்களுக்கும் திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது:

’இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது, இனி நடக்கக் கூடாதது. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், மருத்துவமனையில் இருப்பவர்கள் விரைவில் குணமடையவும் அக்குடும்பத்தில் ஒருவனாய் இறைவனை பிராத்திக்கிறேன் என்று கூறியுள்ளர்.