சிவராத்திரி தினத்தில் பக்தி மழையில் நனைந்த தனுஷ்!

  • IndiaGlitz, [Friday,February 21 2020]

இன்றைய சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள பலர் தங்கள் குல தெய்வக் கோயில்களில் சிவராத்திரி தினத்தன்று சுவாமி வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் இன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்துள்ளார். நடிகர் தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள மல்லிங்கபுரம் என்ற பகுதியில் தான் அவர்களது குலதெய்வமான கஸ்தூரி மங்கம்மாள் என்ற ஆலயம் உள்ளது. இந்த கோவிலுக்கு நடிகர் தனுஷ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சென்று தரிசனம் செய்தார். ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி தினத்தில் குலதெய்வம் கோயிலுக்கு தனது குடும்பத்துடன் சென்று வழிபடுவதை தனுஷ் வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கார்த்திக் சுப்புராஜின் ’ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அடுத்து அவர் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஆந்திர முதலமைச்சரை அடுத்து கேரள முதலமைச்சராகும் பிரபல நடிகர்!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ராஜசேகர ரெட்டி கேரக்டரில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து இருந்தார்

மீண்டும் ஒரு பிரமாண்டமான படத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு என்றாலே பிரம்மாண்டம் என்பதும் பிரம்மாண்டம் என்பதற்கு மறு பெயர் தாணு அவர்கள் தான் என்பதும் தமிழ் திரையுலகினர் தெரிந்ததே.

ஆங்கில படத்திற்கு நிகராக படம் எடுத்தால் மட்டும் போதாது: 'இந்தியன் 2'விபத்து குறித்து ராதாரவி

ஆங்கிலப் படங்களுக்கு இணையாக தமிழ் படங்கள் எடுத்தால் மட்டும் போதாது ஆங்கில படத்தின் படப்பிடிப்பின்போது இருக்கும் பாதுகாப்பு அம்சங்களையும் நாம் கடைபிடிக்க வேண்டும் என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்

1800 ஆண்டு கால தங்கப் புதையல், மறக்கடிக்கப்பட்ட வரலாறு – கோலார் KGF

“பூமியை உள்ளே பிளந்து கொண்டு கீழே போனால் பிணம்; மேலே வந்தால் பணம்” இதுதான் கோலார் தங்கவயல் பகுதியில் இன்றைக்கும் உலவிக் கொண்டு இருக்கும் ஒரு பழமொழி.

விஜய் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா? கே.எஸ்.அழகிரி பதில்!

சமீபத்தில் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குரல் கொடுத்தனர்.