தனுஷின் 'மாரி 2' படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Saturday,April 15 2017]

தனுஷ் இயக்கத்தில் நேற்று வெளியான 'பவர்பாண்டி' திரைப்படம் பாசிட்டிவ் ரிசல்ட் பெற்று அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் அவர் தற்போது வெற்றிமாறனின் 'வடசென்னை' படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். மேலும் அவர் நடித்து வரும் 'எனைநோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனுஷ், காஜல் அகர்வால் நடித்த 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'மாரி 2' படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் கதையை இயக்குனர் பாலாஜி மோகன் எழுதிவருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை தயாராகிவிட்டதாகவும், வரும் ஆகஸ்ட் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால், ரோபோசங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என்றும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படமும் இவ்வருட இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

உடை மாற்றும் அறையில் பிரபல நடிகைக்கு நேர்ந்த விபரீதம். படக்குழு அதிர்ச்சி

சென்னை மயிலாப்பூரில் உள்ள வீடு ஒன்றில் அடிக்கடி படப்பிடிப்பு நடைபெறுவது வழக்கம். திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல் படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறும் இந்த வீட்டில் பிரபல தொலைக்காட்சி சீரியல் ஒன்றின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது...

முருகதாஸ்-பிரியதர்ஷன் தேசிய விருது சர்ச்சை குறித்து கமல்ஹாசன்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 64வது தேசிய விருது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்தது. தேசிய விருது கொடுப்பதில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூற அதற்கு பிரியதர்ஷன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. ..

சசிகலாவின் நெருங்கிய உறவினர் திடீர் மரணம்

சசிகலாவின் சகோதரர் வினோதகனின் மூத்த மகன் மகாதேவன் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47....

ஒவ்வொரு அடிக்கும் 100 ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும். கவுதம் காம்பீர் ஆவேசம்

சமீபத்தில் நடந்த ஸ்ரீநகர் தேர்தலின்போது வாக்கு இயந்திரத்தை கொண்டு சென்ற சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது சில ஜிகாதிகள் தாக்குதல் நடத்தி அவமதித்த வீடியோ ஒன்று நாடு முழுவதும் பரவி பெரும் கண்டன அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய கருத்து குறித்து நேற்று பார்த்தோம்...

விஜய், சூர்யாவை அடுத்து அஜித்துடன் நடிப்பது எப்போது? கீர்த்தி சுரேஷ்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய கீர்த்திசுரேஷ் குறுகிய காலத்தில் இளையதளபதி விஜய்யுடன் 'பைரவா' மற்றும் சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்...