20 வருடங்களுக்கு பின் அஜித்துடன் மீண்டும் இணையும் நடிகர்: 'தல' என பெயர் வைத்தவர் இவர்தான்!

நடிகர் அஜீத்துக்கு 'தல’ என்று பெயர் வைத்த நடிகர், அஜித் படத்தில் 20 வருடங்களுக்குப்பின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய முதல் படமான ’தீனா’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்று என்பது தெரிந்ததே. இந்த படத்தில் அஜித்துடன் நடித்தவர் மகாநதி சங்கர். இவர்தான் அஜித்தை முதன்முதலில் தல என்று அழைத்தவர் என்பதும், அதன் பிறகுதான் அஜித்தை அவரது ரசிகர்கள் தல என்று அழைக்க ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது எச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தில் முக்கிய கேரக்டரில் மகாநதி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 வருடங்களுக்குப்பின் மீண்டும் அஜித்துடன் நடிப்பதை அடுத்து அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்

அஜித் ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கும் இந்த படத்தில் வீரா உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு 30 சதவீதம் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரையிட்ட தியேட்டருக்கு அபராதம்: என்ன காரணம்?

வினேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு  காதல்' என்ற திரைப்படத்தை திரையிட்ட தியேட்டருக்கு ரூபாய் 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு

மீண்டும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பா? படக்குழுவினர் விளக்கம்!

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர் 

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிரபல நடிகர் படத்தின் டிரைலர் ரிலீஸ்!

2022ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் பிரபல நடிகர் நடித்த படத்தின் டிரைலர் கிரிக்கெட் மைதானத்தில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

மகனுக்கு கிடைத்த பட்டம்: பெருமிதம் கொள்ளும் சரத்குமார்-ராதிகா!

மகனுக்கு கிடைத்த பட்டத்தை நினைத்து பெருமிதம் கொள்வதாக சரத்குமார் மற்றும் ராதிகா தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

திருமண தினத்திலேயே பிறந்த குழந்தை: நிக்கி கல்ராணி குடும்பத்தினர் டபுள் சந்தோஷம்

நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி திருமணம் நடந்த அதே நாளில் நிக்கி கல்ராணி வீட்டில் இன்னொரு விசேஷம் நிகழ்ந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது.