close
Choose your channels

தோனி என்ன முடிவெடுப்பார்: ஐஐடி தேர்வில் ருசிகர கேள்வி

Thursday, May 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று முன் தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான முதல் பிளே ஆஃப் போட்டியில் டாஸ் வென்ற தல தோனி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. மும்பை அணியுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சேசிங் செய்து சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இதனால் இந்த முறை முதலில் பேட்டிங் எடுத்திருக்கலாம் என்றும், முதலில் பந்துவீசினால் பனித்துளி காரணமாக பந்துவீச்சாளர்களுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் பேட்டிங் எடுத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் தோனியின் அன்றைய முடிவு பல காரணங்களால் சக்ஸஸ் ஆகவில்லை.

இந்த நிலையில் இந்த போட்டிக்கு முந்தைய நாள் அதாவது மே 6ஆம் தேதி ஐஐடி சென்னை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வில் இதுகுறித்த கேள்வி ஒன்று கேள்வித்தாளில் இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் என்பவர் தயாரித்திருந்த இந்த கேள்வித்தாளில் "சென்னையில் இரவு ஆட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பந்துவீச சவாலாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சரியான வேகத்தில் பந்துவீச முடியாமல் போகும் . எனவே ஐபிஎல் பிளே ஆஃப் 1 போட்டியில், டாஸ் வென்றால் டோனி என்ன முடிவெடுப்பார் என்பதை விளக்கவும் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது

இந்த கேள்வித்தாள் குறித்த தகவலை ஐசிசி தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.