தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் அடுத்த படம் எந்த மொழியில்? கசிந்த தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,April 06 2024]

தல தோனி சமீபத்தில் தோனி என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார் என்பதும் இந்த நிறுவனத்தின் முதல் படமே ஒரு தமிழ் படம் என்பது தெரிந்தது. இந்நிலையில் அடுத்ததாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் குறித்த தகவல் கசிந்து உள்ளது.

தல தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து தோனி என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கிய நிலையில் இந்நிறுவனத்தின் முதல் படமே ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா நடித்த ’எல்ஜிஎம்’ என்ற படம் என்பது அனைவரும் தெரிந்தது. இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போதிலும் எதிர்பார்த்த வசூல் ஆகவில்லை என்று கூறப்பட்டது.

இந்த படத்தின் கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதை மற்றும் படம் எடுத்த விதம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த படத்தினால் தோனியின் நிறுவனத்திற்கு சில கோடிகள் நஷ்டம் என்று கூறப்பட்டது,.

இந்நிலையில் தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிறுவனத்தின் அடுத்த படம் கன்னட மொழியில் தயாராக இருப்பதாகவும் இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் நடிப்பார் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

More News

நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் அம்மா ஷோபாவை சந்தித்த நடிகை.. எமோஷனல் பதிவு..!

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யின் அம்மா ஷோபாவை சந்தித்ததாக எமோஷனலாக நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் வீட்டில் விசேஷம்.. வைரல் புகைப்படங்கள்..!

சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் வீட்டில் விசேஷம் நடந்ததை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

இன்று 'கோட்' பிரசாந்த் பிறந்தநாள்.. வாழ்த்து கூறினாரா தளபதி விஜய்?

தளபதி விஜய் நடித்து 'கோட்' கோட் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிரசாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள்

குதிரை சவாரி பயிற்சி பெற்று வரும் நடிகர் சூர்யா.. காரணம் இதுதான்..!

சூர்யாவின் 44வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்காக அவர் குதிரை சவாரி பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இன்று சனி மகா பிரதோஷம்: ஈசனை வழிபட்டு நன்மைகள் பெறுங்கள்!

பிரதோஷம் என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் பிரதோஷ காலம் எனப்படும்.